- வியாபாரி உள்பட 2 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.
- இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை
மதுரை டி.வி.எஸ் நகர் துரைச்சாமி ரோட்டை சேர்ந்தவர் ஆனந்த் (வயது 30). இவர் அந்தப்பகுதியில் ஜெராக்ஸ் கடை நடத்தி வந்தார். இந்தநிலையில் அவர் நேற்று வீட்டில் தனியாக இருந்தார். சரியாக வருமானம் இல்லாததால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த அவர் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக சுப்பிர மணியபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தற்கொலை செய்து கொண்ட ஆனந்த் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
மதுரை வண்டியூர், செம்மண் சாலை பகுதியைச் சேர்ந்தவர் வேலுச்சாமி (வயது 53). இவரது மனைவி சுமதி. வேலுச்சாமிக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்து வந்தது. இதன் காரணமாக அவருக்கு அல்சர் பாதிப்பு ஏற்பட்டது. அவர் தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். இதற்காக அவர் பல இடங்களில் சிகிச்சை பெற்றார். ஆனால் நோய் குணமாகவில்லை. இதனால் வாழ்க்கையில் விரக்தியடைந்த வேலுச்சாமி வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக அண்ணாநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.