- குழந்தைகளுடன் இளம்பெண் மாயமானார்.
- கடந்த 13-ந் தேதி மதியம் 2 குழந்தைகளுடன் வெளியே சென்ற நிர்மலா, அதன்பின்னர் வீடு திரும்பவில்லை.
மதுரை
மதுரை பெத்தானி யாபுரம், அண்ணா மெயின் வீதி, இந்திரா தெருவை சேர்ந்தவ் கனகராஜ். இவரது மனைவி நிர்மலா (வயது 26). இவர்களுக்கு 5 வயதில் கவிப்பிரியா என்ற மகளும், 2 வயதில் அக்சயன் என்ற மகனும் உள்ளனர்.
கடந்த 13-ந் தேதி மதியம் 2 குழந்தைகளுடன் வெளியே சென்ற நிர்மலா, அதன்பின்னர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடிப்பார்த்தும் தகவல் கிடைக்கவில்லை. இதுகுறித்து நிர்மலாவின் தந்தை கருப்பசாமி கொடுத்த புகாரின் பேரில் கரிமேடு காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மதுரை பழங்காநத்தம் திருவள்ளுவர் நகரைச் சேர்ந்தவர் சுரேஷ். இவரது மகள் தாரணி (வயது21). இவர் தனது பெரியம்மா வீட்டில் தங்கியிருந்தார். கடந்த 13-ந் தேதி தாரணி யாரிடமும் சொல்லாமல் மாயமாகிவிட்டார். பல இடங்களில் தேடிப்பார்த்தும் தகவல் கிடைக்கவில்லை.
இதுகுறித்து தாரணியின் தந்தை சுரேஷ் கொடுத்த புகாரின் பேரில் கரிமேடு காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.