உள்ளூர் செய்திகள் (District)

சூறாவளி காற்றால் நிலைதடுமாறி விழுந்த முதியவர் பரிதாப சாவு

Published On 2022-07-07 09:05 GMT   |   Update On 2022-07-07 09:05 GMT
  • சூறாவளி காற்றால் நிலைதடுமாறி விழுந்த முதியவர் பரிதாபமாக இறந்தார்.
  • இந்த சம்பவம் குறித்து அவரது தம்பி முருகன் கொடுத்த புகாரின் பேரில் திருமங்கலம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருமங்கலம்

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள ராய பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது65). இவருடைய மனைவி கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இதனால் ராஜேந்திரன் மட்டும் தனது வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு ராயபாளையம் கிராமத்தில் நடந்துசென்றார். அப்போது சூறாவளிக்காற்று வீசியுள்ளது. இதில் ராஜேந்திரன் நிலைதடுமாறி கீழே விழுந்தார். அதில் தலையில் பலத்த காயமடைந்த அவரை, அக்கம்பக்கத்தினர் மீட்டு திருமங்கலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று வந்த அவர், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து அவரது தம்பி முருகன் கொடுத்த புகாரின் பேரில் திருமங்கலம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News