சாதனை செய்த மாணவ-மாணவிகளுக்கு பாராட்டு
- அரிமா சங்கம் சார்பில் சாதனை செய்த மாணவ-மாணவிகளுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
- விஜயபாண்டி, கணேசன், பழனி, முத்துக்குமரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
திருமங்கலம்
திருமங்கலம் தனியார் மெட்ரிக் பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வரும் மாணவர் கேரிகிப்ட்சன்சாம் (வயது10). இவர் சிங்கப்பூரில் கடந்த 28-ந் தேதி நடைபெற்ற சர்வதேச சிலம்பாட்ட போட்டியில் முதலிடம் பெற்றார்.
அவருக்கு ரோஸ் அரிமா சங்கத்தின் சார்பில் முன்னாள் மாவட்ட ஆளுநர் அறிவழகன், பட்டய தலைவர் அனிதா பால்ராஜ், செயலாளர் வைரமுத்து, பொருளாளர் சுந்தரம், முன்னாள் தலைவர் சிவராஜன் ஆகியோர் மாணவனை பாராட்டி பொன்னாடை அணிவித்து கேடயம் வழங்கினர்.
இதேபோல ஆசாதி சாட் 2 செயற்கைகோளுக்கு மென்பொருள் தயாரித்து இஸ்ரோ சென்று திரும்பிய திருமங்கலம் அரசு பள்ளி மாணவிகளுக்கு ரோஸ் அரிமா சங்கத்தின் சார்பில் திருமங்கலம் பெண்கள் அரசு மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த 10 மாணவிகளுக்கும் விருது வழங்கி பொன்னாடை அணிவித்து கவுரவித்தனர்.
இதில் நிர்வாகிகள் சுரேஷ்குமார், சுந்தரபாண்டி, விஜயபாண்டி, கணேசன், பழனி, முத்துக்குமரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.