- அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் செல்லும் என்று சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பு வழங்கியதை தொடர்ந்து அ.தி.மு.க.வினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டியது.
- பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர்.
மேலூர்
எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஜூலை 11-ந் தேதி நடந்த அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் செல்லும் என்று சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பு வழங்கியது. இதையடுத்து மேலூரில் கிழக்கு மாவட்ட பேரவை செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான தமிழரசன் தலைமையில் அ.தி.மு.க.வினர் ஊர்வலமாக சென்று செக்கடியில் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர்.
இதில் மேலூர் யூனியன் சேர்மன் பொன்னுசாமி, கொட்டாம்பட்டி தெற்கு ஒன்றிய செயலாளர் வெற்றிசெழியன், மேலூர் நகர் மன்ற கவுன்சிலர் திவாகர் தமிழரசன், தலைமை கழக பேச்சாளர் மலைச்சாமி, தகவல் தொழில்நுட்ப துணை தலைவர் கவுரிசங்கர், முன்னாள் நகர் மாவட்ட பிரதிநிதிகள் சீனிவாசன், தவப்பாண்டி, முன்னாள் கவுன்சிலர்கள் காதர் மைதீன், ஷாஜகான், சக்கரவர்த்தி, பாசறை நிர்வாகிகள் சிவா, பாலாஜி, பேரவை நிர்வாகி அருள் பாண்டி, திருநாவுக்கரசு சிவகுரு மற்றும் பலர் கலந்து கொண்டனர்.