உள்ளூர் செய்திகள் (District)

மைனர் பெண் திருமணம்; 2 பேரிடம் விசாரணை

Published On 2023-04-15 08:42 GMT   |   Update On 2023-04-15 08:42 GMT
  • மைனர் பெண் திருமணம்; 2 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
  • போக்சோ சட்டத்தின் கீழ் வாலிபர் சந்தோஷ் கோபி கிருஷ்ணன் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

மதுரை

மகபூப்பாளையம் வைத்தியநாதபுரம் கங்கை காலனியை சேர்ந்த கண்ணன் மகன் தினேஷ் பவர்சிங் (23). இவர் கடந்த ஆண்டு மைனர் பெண்ணை திருமணம் செய்தார். அவர் சிறுமியின் எதிர்ப்பையும் மீறி பாலியல் உறவு கொண்டார். இதன் விளைவாக சிறுமி கர்ப்பமானார்.

அவளுக்கு தற்போது குழந்தை பிறந்துள்ளது. இது குறித்து மதுரை தெற்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வாலிபர் தினேஷ்பவர்சிங் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருப்பரங்குன்றம் நடுத்தெருவை சேர்ந்த முருகன் மகன் சந்தோஷ் கோபி கிருஷ்ணன் (28). இவர் 10 மாதங்களுக்கு முன்பு மைனர் பெண்ணை திருமணம் செய்தார். அந்த சிறுமிக்கும் தற்போது குழந்தை பிறந்தது.

இது குறித்து திருப்பரங்குன்றம் குழந்தைகள் நல அலுவலர் சுமதி திருப்பரங்குன்றம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார்.

போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வாலிபர் சந்தோஷ் கோபி கிருஷ்ணன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News