உள்ளூர் செய்திகள் (District)

பேராசிரியர் வீட்டில் 35½ பவுன் நகைகள் திருட்டு

Published On 2023-06-04 08:23 GMT   |   Update On 2023-06-04 08:23 GMT
  • பேராசிரியர் வீட்டில் 35½ பவுன் நகைகள் திருட்டு நடந்தது.
  • வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மதுரை

மதுரை சின்னக்கடை வீதி எழுத்தாணி கார தெருவை சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவர் தேவக்கோட்டை கல்லூரியில் பேராசிரியராக வேலை பார்த்து ஓய்வு பெற்று தற்போது மதுரையில் உள்ள ஒரு வேறு கல்லூரியில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி மீனாம்பிகை (வயது54).

சம்பவத்தன்று இவர் வீட்டின் சாவியை பக்கத்து வீட்டில் கொடுத்து வேலைக்கார பெண் வந்தால் கொடுக்குமாறு கூறி சென்றார். வேலைக்கார பெண் பணிகளை முடித்துவிட்டு மீண்டும் சாவியை திருப்பி கொடுத்துவிட்டு சென்றார்.

அதன்பின்னர் மீனாம்பிகை வீட்டிற்கு வந்துள்ளார். இந்த நிலையில் மறுநாள் பீரோவில் பார்த்த போது 35½ பவுன் நகைகள் காணாமல் போயிருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் தெற்குவாசல் போலீஸ் நிலையத்தில் மீனாம்பிகை புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News