உள்ளூர் செய்திகள் (District)
வாசிப்புத்திறன் போட்டி பரிசளிப்பு விழா
- வாசிப்புத்திறன் போட்டி பரிசளிப்பு விழா நடந்தது.
- வட்டார கல்வி அலுவலர் அகிலத்து இளவரசி தலைமை தாங்கினார்.
வாடிப்பட்டி
வாடிப்பட்டி பகுதியில் தமிழக அரசின் இல்லம் தேடி கல்வி திட்டத்தின் கீழ் 1 முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் எழுத்துக்களை வேகமாக நெடுநேரம் வாசிக்கும் போட்டி நடந்தது.
இதில் அதிக புள்ளிகளைப் பெற்ற இல்லம் தேடி கல்வி திட்டதன்னார்வலர்கள் மற்றும் மாணவ-மாணவிகளுக்கு பரிசு வழங்கும் விழா வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் நடந்தது.
வட்டார கல்வி அலுவலர் அகிலத்து இளவரசி தலைமை தாங்கினார். மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஞானசேகரன் முன்னிலை வகித்தார். வட்டார கல்வி அலுவலர் ஷாஜகான் பரிசுகள் வழங்கினார்.
ஆசிரியர் ஒருங்கிணைப் பாளர்கள் மந்திர மூர்த்தி, திருப்பதி, செல்வம் உள்பட பலர் கலந்து கொண்டனர். வட்டார மேற்பார்வையாளர் தமிழ்ச்செல்வி நன்றி கூறினார்.