உள்ளூர் செய்திகள்

மதுரையில் வாட்டி வதைக்கும் வெயில்

Published On 2023-08-01 08:08 GMT   |   Update On 2023-08-01 08:08 GMT
  • மதுரையில் வெயில் அதிகமாக வாட்டி வதைக்கிறது.
  • அனல் காற்று வீசுவதால் வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகின்றனர்.

மதுரை

தமிழகத்தின் பெரும்பா–லான பகுதிகளில் மேற்கு திசையில் வீசும் காற்றின் நிலை மாறுபாட்டால் இடியு–டன் கூடிய மழை பெய்து வருகிறது. ஆனால் அதே வேளையில் ஒரு சில மாவட்டங்களில் கடுமையான வெயில் வாட்டி வதைத்து வருகிறது.

அந்த வரிசையில் மதுரை–யில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் உச்சத்தை எட்டி வருகிறது. கடந்த மே ஜூன் மாதங்களில் அக்கினி நட்சத்திரம் வெயி–லின் தாக்கம் உக்கிரமாக இருந்தது.

காலை 7 மணிக்கு தொடங்கும் வெயில் பிற்ப–கல் கடந்து மாலை வரை உச்சத்தை சுட்டெரித்தது. வழக்கத்தை விட இந்த ஆண்டு வெயில் தாக்கத்தின் காரணமாக பள்ளிகள் திறப்பு கூட இரண்டு முறை தள்ளிவைப்பட்டதை நாம் அறிவோம்.

கோடை காலம் முடிந்து மக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர். ஆனால் விடாது துரத்தும் கருப்பு போல ஆடி மாதமான தற்போதும் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சீதோஷ்ண நிலையில் ஏற்பட்டுள்ள இந்த மாற்றம் பலருக்கு உடல் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. அள–வுக்கு அதிகமான வியர்வை–யால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அவ–திப்பட்டு வருகிறார்கள்.

ஆடி காற்றில் அம்மியும் பறக்கும் என்ற பழமொழியை பொய்யாகும் அளவிற்கு தற்போது ஆடி மாதத்தில் வெயில் வாட்டி வதைப்பது பொதுமக்களை கலக்கம–டைய வைத்துள்ளது. அது–வும் உச்சபட்சமாக கடந்த சில தினங்களாக மதுரையில் 100 சதவீதத்தை தாண்டும் அளவிற்கு கடுமையான வெயில் அடிக்கிறது. நேற்று முன்தினம் மதுரையில் 107 டிகிரி வெயில் பதிவாகி அதிர்ச்சி அடைய வைத்துள் ளது.

இதனால் காலையில் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ, மாணவி–கள், வேலைக்கு செல்பவர் கள், முதியோர்கள், வாகன ஓட்டிகள் பலரும் வெயிலின் தாக்கத்தால் அவதி அடை–கின்றனர். வெயிலின் தாக் கம் குறையாததால் பகலில் வெளியே செல்ல முடியாத நிலை உள்ளது. அத்தியா–வசிய காரணங்களுக்காக கூட செல்லாமல் வீடுகளுக் குள் முடங்கிவிடுகிறார்கள்.

இந்த நிலையில் அடிக்கடி மின்வெட்டு வேறு வந்து பொதுமக்களை வாட்டுவ–தால் அடிக்கும் வெயிலுக்கு வீட்டிலே இருக்க முடியாமல் வயதானவர்கள் குழந்தை–கள் அவதிப்படுகின்றனர். வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க வழிதேடுகி–றார்கள். உச்சபட்சமாக மதுரை விமா நிலையம் பகுதியில் 105.8 பாரன்ஹீட்டும், மதுரை மாநகரில் 107 டிகிரி வரை வெயில் பதி–வா–ன–தாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள் ளது.

இதற்கிடையே தமிழகத் தில் வெப்பத்தின் தாக்கம் மேலும் 2 நாட்கள் நீடிக்கும் என்று சென்னை வானிலை மையம் அறிவித்திருப்பது பொதுமக்களை மேலும் வருத்தமடைய செய்துள்ளது. இந்த நிலை மாற வருண பகவானுக்கு வழிவிட்டு சூரிய பகவான் கடந்து செல்ல வேண்டும் என்பதே மதுரை வாசிகளின் ஒட்டு–மொத்த எதிர்பார்ப்பாக உள்ளது.

Tags:    

Similar News