உள்ளூர் செய்திகள் (District)
- சோழவந்தான் அருகே உள்ள நெடுங்குளம்கிராமத்தில் விவசாயிகளுக்கான மண் பரிசோதனை விழிப்புணர்வு முகாம் நடந்தது.
- மண் மாதிரி எடுக்கும் முறை மற்றும் மண்ணின் வளங்கள்குறித்தும் ஊட்டச்சத்துக்கள் குறித்தும் விளக்கம் அளித்தனர்.
சோழவந்தான்
சோழவந்தான் அருகே உள்ள நெடுங்குளம்கிராமத்தில் விவசாயிகளுக்கான மண் பரிசோதனை விழிப்புணர்வு முகாம் நடந்தது. வாடிப்பட்டி வட்டார வேளாண் உதவி இயக்குநர் வாசுகி, மண் பரிசோதனை நிலைய அலுவலர் ஜோஸ்பின் ஆகியோர் மண் மாதிரி எடுக்கும் முறை மற்றும் மண்ணின் வளங்கள்குறித்தும் ஊட்டச்சத்துக்கள் குறித்தும் விளக்கம் அளித்தனர்.
இதில் ஜி.எச்.சி.எல் நிறுவனத்தின் துணை பொது மேலாளர் அசோக் குமார், சி.எஸ்.ஆர் அலுவலர் சுஜீன், ஊராட்சி மன்ற தலைவர் சுப்பிரமணி, கிராம நிர்வாகஅலுவலர் முத்துராமலிங்கம், உதவிவேளாண்அலுவலர் தங்கையா உட்பட பலர் கலந்து கொண்டனர்.