உள்ளூர் செய்திகள்

மதுரை-காசிக்கு ஜனவரியில் சிறப்பு ெரயில்

Published On 2022-12-12 08:20 GMT   |   Update On 2022-12-12 08:20 GMT
  • தை அமாவாசையையொட்டி மதுரை-காசிக்கு ஜனவரியில் சிறப்பு ெரயில் இயக்கப்படுகிறது.
  • நபருக்கு ரூ.21 ஆயிரத்து 500 கட்டணம், பயண சீட்டுகளை www.ularail.com இணையதளத்தில் பதிவு செய்யலாம்.

மதுரை

தை அமாவாசை அன்று காசியில் முன்னோருக்கு பித்ரு பூஜை செய்வதற்காக மதுரையில் இருந்து சிறப்பு ெரயில் இயக்கப்பட உள்ளது.

இந்த ெரயில் மதுரையில் இருந்து ஜனவரி 16-ந்தேதி புறப்படுகிறது. இதில் பயணம் செய்பவர்கள் 19-ந் தேதி திரிவேணி சங்க மத்தில் புனித நீராடி, அலோபிதேவி சக்தி பீடம் தரிசனம் செய்யலாம்.

20-ந்தேதி கங்கையில் புனித நீராடி காசி விசுவநாதர், அன்னபூரணி, விசாலாட்சி சக்தி பீடத்தை தரிசனம் செய்யலாம். மாலையில் ஆரத்தி நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு, 21-ந்தேதி கயாவில் முன்னோருக்கு பிண்டபூஜை செய்து, மங்கள கவுரி சக்தி பீடத்தை தரிசிக்கலாம்.

23-ந்தேதி காமாக்யா தேவி சக்திபீட தரிசனமும், 25-ந்தேதி கொல்கத்தா காளிதேவி, காளிகாட், பேளூர் மடம், தச்சினேசுவரர் தரிசனமும், 26-ந்தேதி ஒடிசா பூரி கொனார்க் சூரியகோவில், சந்திரபாகா கடற்கரை, பூரி ஜெகநாதர், பிமலாதேவி சக்தி பீடம் தரிசனமும் முடித்து 28-ந்தேதி சுற்றுலா ெரயில் மதுரை திரும்புகிறது.

ெரயில் கட்டணம், தங்குமிடம், உணவு, உள்ளூர் பஸ் வசதி ஆகியவை உள்பட நபருக்கு ரூ.21 ஆயிரத்து 500 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. பயண சீட்டுகளை www.ularail.com இணையதளத்தில் பதிவு செய்யலாம். மேலும் விவரங்களுக்கு 73058 58585 என்ற அலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

மேற்கண்ட தகவலை மதுரை கோட்ட ெரயில்வே அலுவலகம் தெரிவித்துள்ளது.

Tags:    

Similar News