உள்ளூர் செய்திகள் (District)

வாலிபர் பரிதாப சாவு

Published On 2023-03-13 08:08 GMT   |   Update On 2023-03-13 08:08 GMT
  • காயங்களுடன் அனுமதிக்கப்பட்ட வாலிபர் பரிதாபமாக இறந்தார்.
  • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மதுரை,

மதுரை புதுராமநாதபுரம் சாலை சிமெண்ட் ரோடு மின்வாரிய அலுவலகம்- மாநகராட்சி அலுவலகம் முன்புள்ள குப்பை ெதாட்டியின் அருகில் கடந்த 28-ந்தேதி சிறுகாயங்களுடன் 38 வயது மதிக்கத்தக்க நபர் மயங்கி கிடந்தார். அவரை 108 ஆம்புலன்சு மூலம் மீட்டு மதுரை அரசு மருத்துவமனையில் அனுதித்தனர்.

அங்கு சிகிச்சை பலனின்றி கடந்த 9-ந் தேதி பரிதாபமாக இறந்தார். அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என தெரியவில்லை. இறந்த வாலிபரின் பெயர் லக்ஸ்கோ என்று மட்டும் தெரியவந்தது. வலது பக்க நெற்றியில் காயத்தழும்பும், மார்பின் நடுவில் கருப்பு மச்சமும் காணப்படுகிறது.

வெள்ளை கலர் அரைக் கை சட்டை அணிந்துள்ளார். இதுகுறித்து கிராம நிர்வாக அலுவலர் விஜயலட்சுமி கொடுத்த புகாரின்பேரில் தெப்பக்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News