ஆட்டோவில் தவறவிட்ட பணத்தை ஒப்படைத்த டிரைவர்
- ஆட்டோவில் பெண் தவறவிட்ட பணத்தை டிரைவர் ஒப்படைத்தார்.
- அதில் ரூ.5 ஆயிரம் மற்றும் தங்க நகை இருந்தது.
மதுரை
மேற்கு வங்காள மாநிலத்தை சேர்ந்தவர் சோனாலி. இவர் குடும்பத்தினருடன் மதுரை வந்தார். அவர்கள் நேற்று இரவு ஆட்டோவில் மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சென்றனர். அப்ேபாது சோனாலி நகை மற்றும் பணப்பையை ஞாபக மறதியாக ஆட்டோவில் வைத்து விட்டு இறங்கி விட்டார். அதன் பிறகு தான் இவருக்கு பணப்பை தொலைந்து போனது நினைவுக்கு வந்தது.
இதனால் அதிர்ச்சி அடைந்த சோனாலி, இதுகுறித்து போக்குவரத்து போலீசுக்கு தகவல் தெரிவித்தார். அந்த வழியாக வந்த மத்திய போக்குவரத்து புலனாய்வு பிரிவு இன்ஸ்பெக்டர் ரமேஷ்குமாரிடம் சோனாலி நடந்த விவரங்களை தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து போலீசார் அந்த ஆட்டோ குறித்து கண்காணிப்பு காமிரா உதவியுடன் தேடினர். இதற்கிடையே அந்த ஆட்டோ டிரைவர் மீண்டும் சம்பவ இடத்துக்கு வந்து சோனாலியிடம் பணப்பையை திரும்ப ஒப்படைத்தார். அதில் ரூ.5 ஆயிரம் மற்றும் தங்க நகை இருந்தது. வடக்கு ஆவணி மூல வீதியைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் ரமேசை போக்குவரத்து போலீசார் பணமுடிப்பு வழங்கி பாராட்டினர்.