உள்ளூர் செய்திகள் (District)
கழுத்தில் காயங்களுடன் பிணமாக கிடந்த வாலிபர்
- ஞானஒளிவுபுரத்தில் கழுத்தில் காயங்களுடன் பிணமாக கிடந்த வாலிபரை மீட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.
மதுரை
மதுரை ஞானஒளிவுபுரம் விசுவாசபுரி முதல் தெருவை சேர்ந்தவர் முனியசாமி (39). இவர் வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவரது கழுத்தில் காயங்கள் இருந்தன. இதனால் அவரது சாவில் சந்தேகம் இருப்பதாக உறவினர்கள் கருதுகின்றனர். இது குறித்து முனியசாமியின் தந்தை பூபதி கரிமேடு போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து முனியசாமி சாவுக்கான காரணம் என்ன? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவர் தற்கொலை செய்து கொண்டாரா? அவரது கழுத்தில் எப்படி காயம் ஏற்பட்டது? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.