உள்ளூர் செய்திகள் (District)
- பரவை கண்மாய் அருகே பிணமாக கிடந்த முதியவர் யார்?
- போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
வாடிப்பட்டி
சமயநல்லூர் அருகே பரவை சின்ன கண்மாய் அருகில் சுமார் 65 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத முதியவர் பிணம் கிடந்தது. இதுகுறித்து கிராம நிர்வாக அலுவலர் சாந்தி, கிராம உதவியாளர் குப்புசாமி ஆகியோர் கொடுத்த தகவல் பேரில் சமயநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்தி,
சப்-இன்ஸ்பெக்டர் பழனிச்சாமி ஆகியோர் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். வெள்ளை நிற முழுக்கை சட்டையும், பச்சை ஆரஞ்சு கோடு போட்ட டிரவுசரும் பூணூல் அணிந்து இருந்தார். அவர் யார்? எந்த ஊர்? என்று தெரியவில்லை. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.