உள்ளூர் செய்திகள்

ஓட்டப்பந்தய போட்டியில் வாலிபர் சாதனை

Published On 2023-07-22 08:41 GMT   |   Update On 2023-07-22 08:41 GMT
  • ஓட்டப்பந்தய போட்டியில் சோழவந்தான் வாலிபர் சாதனை படைத்துள்ளார்.
  • இவருக்கு சொந்த கிராமத்தில் கிராம மக்கள் மற்றும் உறவினர் சார்பாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

சோழவந்தான்

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே மேலக்கால் ஊராட்சிக்குட்பட்ட கச்சிராயிருப்பு கிராமத்தை சேர்ந்த கண்ணன்-கவிதா தம்பதி மகன் விக்னேஷ் (வயது22). இவர் நேபாளத்தில் நடந்த விளையாட்டுப் போட்டியில் 200 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் வெள்ளிப் பதக்கமும், 400 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தங்கப்பதக்கமும் பரிசு பெற்றார். இவருக்கு சொந்த கிராமத்தில் கிராமமக்கள் மற்றும் உறவினர் சார்பாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

இதுகுறித்து விக்னேஷ் கூறுகையில், நான் விக்கிரமங்கலம் பள்ளியில் பள்ளி படிப்பை முடித்து உசிலம்பட்டி தேவர் கல்லூரியில் பி.எஸ்.சி. படித்துள்ளேன்.ஆரம்பத்தில் இருந்து விளையாட்டில் ஆர்வம் இருந்ததால் எனக்கு விளையாட்டில் உயர்ந்த அளவில் பரிசு பெற வேண்டும் என்று எண்ணம் இருந்தது. பயிற்சி எடுக்க வசதி இல்லை ஆகையால் காலையில் மாலையிலும் கிராமத்தில் சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக ஓடி பயிற்சி பெற்றேன். தஞ்சாவூர் மாவட்டத்திலும், காஷ்மீரிலும் நடந்த போட்டியில் பரிசு பெற்றேன்.என் குடும்பம் மிகவும் கஷ்டப்படுவதால் அரசு எனக்கு உதவி செய்தால் இன்னும் திறமையாக விளையாடி அரசுக்கும் நாட்டிற்கும் நல்ல பெயர் எடுத்துக் கொடுப்பேன் என்று தெரிவித்தார்.

Tags:    

Similar News