உள்ளூர் செய்திகள் (District)

கைது செய்யப்பட்ட செந்தில்குமார்.

கூடலூர் அருகே செல்போன் கோபுரத்தில் டீசல் திருடியவர் கைது

Published On 2023-09-11 05:29 GMT   |   Update On 2023-09-11 05:29 GMT
  • கேரளாவிற்கு கூலித்தொழி லாளர்களை ஜீப்பில் ஏற்றி செல்லும் செந்தில்குமார் பகலில் நோட்ட மிட்டு இரவில் திருடுவதை வாடிக்கையாக வைத்து ள்ளார்.
  • பகல் நேரத்தில் டிரைவராகவும் இரவில் தான் திருடுவதற்காக தேர்ந்தெடுத்த வீடு , நிறுவனங்களில் கைவரிசை காட்டி வந்துள்ளார்.

கூடலூர்:

தேனி மாவட்டம் கூடலூர் முத்தாலம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் செந்தில் குமார் (33). இவர் கூடலூரிலிருந்து கேரளாவில் உள்ள ஏலக்காய் தோட்டங்களில் வேலை செய்யும் கூலித்தொழி லாளர்களை ஏற்றி செல்லும் ஜீப் டிரைவராக உள்ளார். இந்நிலையில் குமுளி ஸ்பிரிங் வேலி என்ற இடத்தில் தனியார் செல்போன் டவர் உள்ளது. அங்கு வைத்திருந்த 205 லிட்டர் டீசல் திருடு போனது.

இதுகுறித்து குமுளி போலீஸ் நிலைய த்தில் புகார் அளிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் ஜோபின் ஆண்டனி வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி னார். அப்போது டீசலை திருடியது செந்தில்கு மார் என தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர்.

இதுகுறித்து போலீசார் தெரி விக்கையில், கேரளாவிற்கு கூலித்தொழி லாளர்களை ஜீப்பில் ஏற்றி செல்லும் செந்தில்குமார் பகலில் நோட்ட மிட்டு இரவில் திருடுவதை வாடிக்கையாக வைத்து ள்ளார்.

பகல் நேரத்தில் டிரைவராகவும் இரவில் தான் திருடுவதற்காக தேர்ந்தெடுத்த வீடு , நிறுவனங்களில் கைவரிசை காட்டி வந்துள்ளார். இவர் மீது குமுளி, வண்டி பெரியாறு, கம்பம் மெட்டு, கட்டப்பணை உள்ளிட்ட பல்வேறு போலீஸ் நிலையங்களில் திருட்டு வழக்குகள் உள்ளது என்றனர்.

Tags:    

Similar News