உள்ளூர் செய்திகள் (District)

சங்கரன்கோவில் அருகே மோட்டார் சைக்கிளில் நின்று மதுவிற்றவர் கைது

Published On 2023-05-10 08:50 GMT   |   Update On 2023-05-10 08:50 GMT
  • பனையூர்-செண்பகபுரம் சாலையில் போலீசார் ரோந்து சென்றனர்.
  • மாடசாமி மது விற்பனை செய்தது விசாரணையில் தெரியவந்தது.

நெல்லை:

சங்கரன்கோவில் அருகே உள்ள கரிவலம்வந்தநல்லூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் லெட்சுமணன் தலைமையிலான போலீசார் பனையூர்-செண்பகபுரம் சாலையில் ரோந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது அங்கு சாலையில் மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு நின்று கொண்டிருந்த ஒருவரை பிடித்து விசாரித்தனர். அதில் அவர் கரிவலம்வந்தநல்லூரை அடுத்த சங்குபுரம் இந்திரா காலனியை சேர்ந்த மாடசாமி(வயது 50) என்பதும், மோட்டார் சைக்கிளில் பதுக்கிவைத்து மதுபாட்டி ல்கள் விற்பனை செய்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து, 20 மதுபாட்டில்கள், மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர்.

Tags:    

Similar News