உள்ளூர் செய்திகள் (District)

சாமந்தி பூ கிலோ ரூ.40-க்கு விற்பனை

Published On 2023-11-17 09:38 GMT   |   Update On 2023-11-17 09:38 GMT
  • 100 முதல் 150 பூக்கள் வரை தொடந்து 6 மாதம் வரை பூக்கும்.
  • அறுவடை கூலி கூட கிடைக்காததால் விவசாயிகள் வேதனை

 பாப்பிரெட்டிப்பட்டி. 

தருமபுரி மாவட்டத்தில், பாப்பிரெட்டிப்பட்டி, பொம்மிடி, கடத்தூர், அரூர், பென்னாகரம், மா ரண்ட அள்ளி, நல்லம்பள்ளி உள்பட பல்வேறு பகுதிக ளில் விவசாயிகள் பரவ லாக சாமந்தி பூ சாகுபடி செய்து வருகின்றனர்.

சாமந்தி மிதவெப்ப மண்டல பயிராகும், தரும புரி மாவட்டத்தில் சாமந்திப் பூக்கள் தரமாக வருவதற்கு நீர் தேக்கம் உள்ள வடிகால் வசதி, குறைந்த கனமான களிமண் அதிக அளவில் காணப்படுவதால் விவசாயிகள் விரும்பி இந்த சாமந்தி மலர் சாகுபடியில் ஈடுபடுகின்றனர்

நடவு செய்த 3 மாதத்திற்கு பிறகு ஒரு செடியில் 100 முதல் 150 பூக்கள் வரை தொடந்து 6 மாதம் வரை பூக்கும். ஜூன் மாதத்தில் பயிரிடப்பட்ட சாமந்தி பூக்கள் ஜனவரி மாதம் வரை சாகுபடி செய்யப்படுகிறது.

குறிப்பாக மத வழிபாடு, சமூக நோக்கம், மாலை மரியாதை, தீபாவளி, ஹோலி பண்டிகை, தெய்வ வழிபாடு என தொடர்ந்து மத நிகழ்ச்சிகளிலும், நல்ல காரியங்களிலும், இந்த பூக்கள் முக்கிய இடம் பிடிப்ப தால் நம்பிக்கையுடன் விவசாயிகள் பயிரிடு கின்றனர்

மேலும் கடந்த 2 மாதங்களாக தொடர்ந்து சாமந்திப் பூவின் விலை வீழ்ச்சியில் இருப்பதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

விவசாயிகள் நிலத்தை உழுது, பயிர் நடவு செய்து, மருந்து தெளித்து பராம ரிப்பு செய்து வந்த நிலையில் அறுவடை கூலி கூட கிடைப்பதில்லை என வேதனை தெரிவிக்கின்ற னர். இதனால் தங்கள் குடும்பத்தின் 6 மாத உழைப்பு வீணாக சென்று தற்போது தாங்கள் கடனாளி யாகியுள்ளதாக வேதனை தெரி விக்கின்றனர்.

இது குறித்து விவசாயிகள் தெரிவிக்கை யில்:-

தங்கள் குடும்பமே ஜூன் மாதம் முதல் கடந்த 4 மாதங்களாக கடுமையாக உழைத்து, கடன் வாங்கி மருந்து தெளித்து நோய் நொடியில் இருந்து மலர்க ளை காப்பாற்றுதல், கூலி ஆட்களுக்கு கூலி கொடுத் தல், அதிகாலையில் குடும் பத்துடன் எழுந்து மலர் அறுவடையில் ஈடுபடுவது, இவ்வளவு வேலையில் ஈடுபட்டு தற்போது அறு வடை காலத்தில் உரிய விலை கிடைக்காததால் தாங்கள் மன அழுத்தத்தில் உள்ளதாக கூறுகின்றனர்.

மேலும் தொடர்ந்து 2 மாதங்களாக விலை வீழ்ச்சி யை நோக்கியே இருப்பதா கவும், தீபாவளியின் போது ரூ.20 ரூபாய்க்கு மட்டுமே கிலோ விற்றதாகவும், தற் போது 40 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. சாமந்தி பூவுக்கு உரிய விலை கிடைக்காததால் கடனாளி யாக மாறும் சூழலுக்கு தங்கள் குடும்பமே தள்ளப் பட்டுள்ளதாகவும் விவசாயி கள் வேதனை தெரிவிக்கின்ற னர். எனவே அரசு தங்க ளுக்கு உதவி செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்

மேலும் வருகின்ற காலங்களில் ஐயப்பன் பக்தர்கள் சீசன் பூஜைக்கா கவும், மலர்கள் அதிக அளவில் பயன்படுத்தி னாலும், வருகின்ற பண்டி கை காலங்கள் புத்தாண்டு, பொங்கல் போன்ற காலங்க ளில் ஓரளவிற்கு விலை உயர்ந்தால் மட்டுமே விவசா யிகள் கடனிலிருந்து மீள முடியும் என நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

Similar News