உள்ளூர் செய்திகள் (District)
- தருமபுரி அருகே திருமணம் ஆன இளம்பெண் மாயம் ஆனார்.
- கணவர் போலீணில் புகார்.
தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் அடுத்த மேல் சவுளுப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சின்னசாமி, (வயது 31) இவருக்கும் மேல் சவுளுப்பட்டியைச் சேர்ந்த மாரி மகள் மகேஸ்வரிக்கும் கடந்த 2022 ஆம் ஆண்டு திருமணம் நடந்துள்ளது.
இந்த நிலையில் தம்பதிகள் இருவரும் குடும்பம் நடத்தி வந்தனர். திருமணம் ஆகி ஒரு ஆண்டு ஆகியும் இவர்களுக்கு குழந்தை இல்லை. இந்த நிலையில் கடந்த மாதம் 12 ந் தேதி காலை சின்னசாமி வெளியில் வேலையாக சென்று விட்டு மாலை வீட்டில் வந்து பார்த்தபோது மனைவி மகேஸ்வரியை காணவில்லை.
இது குறித்து உறவினர்கள் வீடு மற்றும் அக்கம் பக்கத்தில் தேடி பார்த்தும் அவர் கிடைக்கவில்லை. இது குறித்து சின்னசாமி காரிமங்கலம் போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான மகேஸ்வரியை தேடி வருகின்றனர்.