உள்ளூர் செய்திகள்
- மயிலாடுதுறை அருகே உலக சுற்றுசூழல் தினவிழா நடைபெற்றது.
- சுற்றுச்சூழலை பாதுகாப்பதன் அவசியம் குறித்தும் மரம் நடுதலின் அவசியம் குறித்தும் எடுத்துக்கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
தரங்கம்பாடி:
மயிலாடுதுறை அருகே மேலையூர் கிராமத்தில் தனியார் பள்ளியில் உலக சுற்றுச்சூழல் தின விழா நடைபெற்றது.
இவ்விழாவில், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நிஷா சிறப்பு விருந்தினராக பங்கேற்று, மாணவர்களுக்கு சுற்றுச்சூழல் விழிப்புணர்வு குறித்து உரையாற்றினார்.
தொடர்ந்து தனியார் பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டுவைத்து பொதுமக்களுக்கு மரக்கன்றுகளை வழங்கியும் சுற்றுச்சூழலை பாதுகாப்பதன் அவசியம் குறித்தும் மரம் நடுதலின் அவசியம் குறித்தும் எடுத்துக்கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
இதில் பள்ளி மாணவர்கள், கிராம மக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.