காரைக்கால் திருநள்ளாறில் மோட்டார் சைக்கிள்கள் மோதல்; தாய்-மகள் காயம்
- பாக்யா திருநள்ளாறில் உள்ள ஒரு தனியார் கோச்சிங் சென்டரில் வேலை செய்து வருகிறார்.
- அல் ரசீது நிலைதடுமாறி முன்னே சென்று கொண்டிருந்த, பாக்கியாவின் மொபட் மீது மோதினார்.
புதுச்சேரி:
காரைக்காலை அடுத்த திருநள்ளாறு அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் ரமேஷ். இவரது மனைவி பாக்யா (வயது 31). இவர் திருநள்ளாறில் உள்ள ஒரு தனியார் கோச்சிங் சென்டரில் வேலை செய்து வருகிறார். இவர் தனது மகள் சாய்னாவுடன் திருமண விழா ஒன்றில் கலந்து கொண்டு, மொபட்டில் வீடு திரும்பி கொண்டு இருந்தார். அப்போது, கும்பகோணம் சுவாமி மலையை சேர்ந்த அல் ரசீது (20) என்பவர், தனது நண்பர் முகமது இஷாத் (21) என்பவருடன் மோட்டார் சைக்கிளில் வந்தார். அப்போது நிலை தடுமாறி முன்னே சென்று கொண்டிருந்த, பாக்கியாவின் மொபட் மீது மோதினார். இதில் பாக்கியா, அவரது மகள் மற்றும் மோட்டார் சைக்கிளில் சென்ற 2 வாலிபர்களும் காயம் அடைந்தனர். தொடர்ந்து அங்கிருந்த வர்கள் 4 பேரையும் மீட்டு காரைக்கால் அரசு ஆஸ்பத்தி ரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இது குறித்து பாக்யா வின் சகோதரர் பாக்கியராஜ் காரைக்கால் நகர போக்கு வரத்து போலீசில் கொடுத்த புகாரின் பேரில், போலீ சார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.