உள்ளூர் செய்திகள்

சிதம்பரம் அருகே இளம்பெண்ணை பலாத்காரம் செய்த வாலிபர் கைது

Published On 2022-08-17 08:52 GMT   |   Update On 2022-08-17 08:52 GMT
  • திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி உல்லாசத்தில இருந்ததாக கூறப்படுகிறது.
  • அருணா சேத்தியாதோப்பு காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் சேர்த்து இன்ஸ்பெக்டர் மீனா சப் இன்ஸ்பெக்டர் இளவரசி ஆகியோர் வழக்கு பதிந்து அரவிந்தை கைது செய்தனர்.

கடலூர்: 

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே சிவபுரியை சேர்ந்தவர் அருள் பிரகாசம். இவரது மகள் அருணா வயது 22 இவர் சேத்தியாதோப்பு மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதில் கடலூர் மாவட்டம் முட்டம் அருகே உள்ள அழிஞ்சி மங்கலம் கிராமத்தைச் சேர்ந்த அன்பழகன் அவரது மகன் அரவிந்த் வயது 2019-ல் பிஎஸ்சி அக்ரி படிக்கும்போது இவருக்கும் எனக்கும் பழக்கம் ஏற்பட்டது என்னை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி உல்லாசத்தில இருந்ததாகவும் பிறகு சில நாட்களாக தொலைபேசி துண்டித்து விட்டார் திருமணம் செய்ய மறுத்துவிட்டார் என அருணா சேத்தியாதோப்பு காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் சேர்த்து இன்ஸ்பெக்டர் மீனா சப் இன்ஸ்பெக்டர் இளவரசி ஆகியோர் வழக்கு பதிந்து அரவிந்தை கைது செய்தனர். 

Tags:    

Similar News