உள்ளூர் செய்திகள் (District)

நாமகிரிப்பேட்டை அருகே என்ஜினீயர், மனைவியுடன் தற்கொலை முயற்சி

Published On 2023-05-18 07:43 GMT   |   Update On 2023-05-18 07:43 GMT
  • சதீஷ்குமார் (வயது 31), சிவில் என்ஜினீயர். இவரது மனைவி சகிலா (27). இவர்களுக்கு 3 வயதில் குழந்தை உள்ளது.
  • சதீஷ்குமாருக்கு‌ கடன் கொடுத்தவர்கள் மற்றும் கட்டுமான பொருட்கள் கொடுத்தவர்கள் பணம் கேட்டு நெருக்கடி கொடுத் ததாக கூறப்படுகிறது.

ராசிபுரம்:

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் தாலுகா நாமகிரிப்பேட்டை அருகே உள்ள ஒடுவன்குறிச்சி பகுதியை சேர்ந்தவர் சதீஷ்குமார் (வயது 31), சிவில் என்ஜினீயர். இவரது மனைவி சகிலா (27). இவர்களுக்கு 3 வயதில் குழந்தை உள்ளது.

தற்போது சதீஷ்குமார் தனது மனைவியுடன் ஓசூரில் தங்கி இருந்து தொழில் செய்து வந்தார். இந்த நிலையில் தருமபுரி மாவட்டத்தை சேர்ந்த ஓய்வு பெற்ற சப்-இன்ஸ்பெக்டர் சாத்தன் என்பவருக்கு ரூ.40 லட்சம் மதிப்பீட்டில் வீடு கட்டி தந்துள்ளதாக கூறப்படுகிறது.

அதற்கான பணத்தில் ரூ.30 லட்சத்தை சதீஷ்குமாருக்கு, சப்-இன்ஸ்பெக்டர் கொடுத்து விட்டார். மீதி ரூ.10 லட்சத்தை திருப்பி தரவில்லை என்றும் கூறப்ப டுகிறது.

தற்கொலை முயற்சி

இது பற்றி சாத்தன் மீது சதீஷ்குமார் ஓசூர் போலீசில் புகார் அளித்துள்ளார். ஆனால் போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. சதீஷ்குமாருக்கு கடன் கொடுத்தவர்கள் மற்றும் கட்டுமான பொருட்கள் கொடுத்தவர்கள் பணம் கேட்டு நெருக்கடி கொடுத் ததாக கூறப்படுகிறது.

இதனால் சதீஷ்குமார் தனது மனைவியுடன், சொந்த ஊரான ஒடுவன்குறிச்சிக்கு வந்து விட்டார். மேலும் கடன் தொல்லையால் விரக்தியில் இருந்த அவர், தனது மனைவியுடன் மண்ணெண்னை உடலில் ஊற்றி தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படுகிறது.

சிகிச்சை

இதை அறிந்த அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு ராசிபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து நாமகிரிப்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News