உள்ளூர் செய்திகள் (District)

தியாகதுருகம் அருகே கொத்தனார் வீட்டில் 15 பவுன் நகை - பணம் கொள்ளை: போலீசார் விசாரணை

Published On 2023-08-10 08:07 GMT   |   Update On 2023-08-10 08:07 GMT
  • உறவினர்கள் தொலைபேசியில் தொடர்பு கொண்டு வீடு திறந்து கிடப்பதாக கூறியுள்ளனர்.
  • திரு மணத்திற்காக வைத்திருந்த பணம், நகை ஆகியவைகள் கொள்ளை போனது தெரியவந்தது.

கள்ளக்குறிச்சி:

கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் அருகே உள்ள விளக்கூர் புது காலனி பகுதி யை சேர்ந்தவர் தண்டேக் காரன் மகன் முருகவேல் (வயது 30) கொத்த னார். இவர் கடந்த 7- ந் தேதி தனது மனைவி லட்சுமியுடன் உறவினர் வீட்டு துக்க நிகழ்ச்சிக்கு சென்று விட்டார். இந்நிலையில் இன்று காலை அவரது உறவினர்கள் தொலைபேசியில் தொடர்பு கொண்டு வீடு திறந்து கிடப்பதாக கூறியுள்ளனர். விரைந்து வந்து பார்த்த போது வீட்டின் பீரோவில் இருந்த பூட்டையும் உடைத்து அதிலிருந்து ரூ. 3 லட்சம் பணம் மற்றும் 15 பவுன் நகை, வெள்ளி கொலுசு ஆகியவற்றை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றதும் தெரிய வந்தது.

இது குறித்து தகவலின் பேரில் தியாகதுருகம் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் பிரபாகரன் உள்ளிட்ட போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை செய்து வருகின்றனர். விசார ணையில் முருக வேலின் அக்காள் மகள் திரு மணத்திற்காக வைத்திருந்த பணம், நகை ஆகியவைகள் கொள்ளை போனது தெரியவந்தது. மேலும் திருட்டுச் சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்கள் குறித்தும் அப்பகுதியில் கண்காணிப்பு கேமராக்கள் ஏதாவது உள்ளதா என்பது குறித்தும் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

Tags:    

Similar News