உள்ளூர் செய்திகள் (District)
தியாகதுருகம் அருகே வக்கீலுக்கு கொலை மிரட்டல் விடுத்த 3 வாலிபர்கள் மீது வழக்கு
- தியாகதுருகம் அருகே விருகாவூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மணிமாறன் வக்கீல்.
- மணிமாறனை ஆபாசமாக திட்டி, தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.
கள்ளக்குறிச்சி:
தியாகதுருகம் அருகே விருகாவூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மணிமாறன் (வயது 31). வக்கீல். இவர் தனது வீட்டின் முன்பு நின்று கொண்டிருந்தார். அப்பொழுது அதே பகுதியைச் சேர்ந்த தங்கவேல் மகன்கள் சிட்டிபாபு (21), பிரகாஷ் (23), பிரபு (24) ஆகியோர் மணிமாறனை ஆபாசமாக திட்டி, தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து வக்கீல் மணிமாறன் கொடுத்த புகாரின் பேரில் சிட்டிபாபு, பிரகாஷ், பிரபு ஆகிய 3 பேர் மீதும் வரஞ்சரம் போலீசார் வழக்கு பதிவு செய்து நடத்தி வருகின்றனர்.