உள்ளூர் செய்திகள்

திட்டக்குடி அருகே அரசு அதிகாரி வீட்டில் நகை கொள்ளை

Published On 2022-12-19 07:13 GMT   |   Update On 2022-12-19 07:13 GMT
வீட்டை பூட்டிவிட்டு சாவியை பக்கத்தில் உள்ள ஓட்டு வீடு மாடத்தில் வைப்பது வழக்கம்.

கடலூர்:

திட்டக்குடி அருகே அடரி கிராமத்தில் சேலம் மெயின் ரோட்டில் வசிப்பவர் கபிலன் (வயது32) . இவர் விருத்தாச்சலம் ஊரக வளர்ச்சி துறை அலுவலகத்தில் இளநிலை உதவியாளராக பணிபுரிந்து வருகிறார்.இவர் வழக்கம் போல் தனது வீட்டை பூட்டிவிட்டு சாவியை பக்கத்தில் உள்ள ஓட்டு வீடு மாடத்தில் வைப்பது வழக்கம். அதன்படி வழக்கம் போல் சாவியை வைத்துவிட்டு சென்றுள்ளார்.

இவர் மதியம் தனது மனைவியுடன் வீட்டிற்கு வந்த பார்த்தபோது வீட்டின் கதவு திறந்து கிடப்பது கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.பின் உள்ளே சென்று பார்த்த போது வீட்டில் உள்ளே பீரோவில் இருந்த 8 பவுன் நகைகளை மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர்.இது குறித்து புகாரின் பேரில் சிறுபாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். 

Tags:    

Similar News