உள்ளூர் செய்திகள்

பொள்ளாச்சி அருகே வடமாநில வாலிபர் அடித்துக் கொலை

Published On 2023-05-15 09:53 GMT   |   Update On 2023-05-15 09:53 GMT
  • டாஸ்மாக் கடைக்கு சென்றவர், அதன்பிறகு கம்பெனிக்கு திரும்பி வரவில்லை
  • பிணத்தை மீட்டு போலீசார் பிரேத பரிசோதனைக்காக பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

பொள்ளாச்சி,

பீகார் மாநிலம் சாம்ப்ரான் பகுதியைச் சேர்ந்தவர் சிவ்டாட் மான்ஜி (வயது 31). இவர் பொள்ளாச்சி அருகே கோட்டூர் ரமணமுதலிபுதூர் பிரிவில் உள்ள காலிபாட்டில் கம்பெனியில் தங்கியிருந்து வேலை பார்த்தார்.

நேற்று இரவு கம்பெனியில் இருந்த அவர் மதுகுடித்து விட்டு வருவதாக டாஸ்மாக் கடைக்கு சென்றார். அதன்பிறகு அவர் கம்பெனிக்கு திரும்பி வரவில்லை. இதனால் இரவில் சிவ்டாட் மான்ஜியை சக ஊழியர்கள் தேடி வந்தனர். இந்தநிலையில் சிவ்டாட் மான்ஜி, கோட்டூர் ரமணமுதலிபுதூர் பிரிவில் உள்ள நாகபிள்ளையார் கோவில் எதிரில் பிணமாக கிடந்தார். இன்று காலை அந்த வழியாகச் சென்றவர்கள் சிவ்டாட் மான்ஜி பிணமாக கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

இதுபற்றி அவர்கள் கோட்டூர் போலீஸ்நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் நேரில் சென்று விசாரணை மேற்கொண்டனர். அப்போது சிவ்டாட் மான்ஜியின் உடலில் பல இடங்களில் காயங்கள் இருந்தன. இதனால் அவர் அடித்துக் கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது.

நேற்று இரவு மதுகுடிக்கச் சென்றபோது யாருடனாவது தகராறு ஏற்பட்டு ஆத்திரத்தில் அந்த நபர்கள் சிவ்டாட் மான்ஜியை அடித்துக் கொலை செய்து இருக்கலாம் என போலீசார் கருதுகிறா ர்கள். இதுதொடர்பாக அவர் எந்த கடைக்கு மது குடிக்கச் சென்றார், அவருடன் வேறு யாராவது சென்றார்களா என்பது பற்றி போலீசார விசாரித்து வருகிறார்கள். மேலும் சிவ்டாட் மான்ஜியின் பிணத்தை மீட்டு போலீசார் பிரேத பரிசோதனைக்காக பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

Tags:    

Similar News