உள்ளூர் செய்திகள்

பழனியில் முத்தமிழ் முருகன் மாநாடு- தனி இணையதளம் தொடக்கம்

Published On 2024-05-28 08:52 GMT   |   Update On 2024-05-28 08:52 GMT
  • அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு நடைபெறுகிறது.
  • இந்து சமய அறநிலையத் துறை ஆலோசனைக் குழு உறுப்பினர்களால் தொடங்கி வைக்கப்பட்டது.

சென்னை:

திண்டுக்கல் மாவட்டம், பழனியில் வருகிற ஆகஸ்டு மாதம் 24 மற்றும் 25 -ந் தேதிகளில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு நடைபெறுகிறது.

இதில் இந்தியா மற்றும் வெளிநாடுகளில் இருந்து பங்கேற்க விரும்பும் முருக பக்தர்கள் மற்றும் ஆய்வுக் கட்டுரைகளை சமர்ப்பிக்க விரும்பும் பேராளர்கள்/ஆய்வு மாணவர்கள் பதிவு செய்திடும் வகையில் தனியாக வடிவமைக்கப்பட்டு உள்ள இணையதளம் https://muthamizhmuruganmaanadu2024.com இன்று இந்து சமய அறநிலையத் துறை ஆலோசனைக் குழு உறுப்பினர்களால் தொடங்கி வைக்கப்பட்டது.

Tags:    

Similar News