உள்ளூர் செய்திகள்

நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களை படத்தில் காணலாம்.

கொடைக்கானலில் 35 பயனாளிகளுக்கு தொகுப்பு வீடுகள்!

Published On 2023-03-28 06:52 GMT   |   Update On 2023-03-28 06:52 GMT
  • நகர் பகுதியில் உள்ள 35 பயனாளிகளுக்கு தொகுப்பு வீடுகள் கட்டுவதற்கான உத்தரவுகள் வழங்கப்பட்டது.
  • பல்வேறு துறையைச் சேர்ந்த அதிகாரிகள், அலுவலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

கொடைக்கானல்:

தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பாக புதிதாக தொகுப்பு வீடுகள் கட்டுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக பழனி எம்.எல்.ஏ செந்தில்குமார் ஆலோசனையின் பேரில் கொடைக்கானல் நகர் பகுதியில் உள்ள 35 பயனாளிகளுக்கு தொகுப்பு வீடுகள் கட்டுவதற்கான உத்தரவுகள் வழங்கும் நிகழ்ச்சி நகராட்சி நகர் மன்ற கூடத்தில் நடைபெற்றது.

இதில் நகர சபை தலைவர் செல்லத்துரை, துணைத் தலைவர் மாயக்கண்ணன் ஆகியோர் கலந்து கொண்டு உத்தரவுகளை வழங்கினர். இந்நிகழ்ச்சியில் முன்னாள் நகர சபை தலைவர் முகமது இப்ராஹிம், வாரிய தொழில்நுட்ப அதிகாரி டோனி உட்பட பல்வேறு துறையைச் சேர்ந்த அதிகாரிகள், அலுவலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News