உள்ளூர் செய்திகள்

அனுமதியின்றி இயக்கப்பட்ட தனியார் பஸ்.

திண்டிவனம் அருகே அனுமதியின்றி இயக்கப்பட்ட தனியார் பஸ்சுக்கு அபராதம்

Published On 2023-03-16 08:58 GMT   |   Update On 2023-03-16 08:58 GMT
  • திண்டிவனம் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் நேற்று இரவு வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.
  • 50 பயணிகளை ஏற்றிக்கொண்டு பாண்டியிலிருந்து தமிழகப் பகுதிக்கு ஒரு பஸ் வந்தது. இதனை நிறுத்தி ஆவணங்களை சோதனை செய்த போது உரிய அனுமதியின்றி தனியார் பஸ் வந்தது தெரிந்தது.அலுவலர் பஸ்சை நிறுத்தி அபராதம் விகித்தார்.அலுவலர் பஸ்சை நிறுத்தி அபராதம் விகித்தார்.

விழுப்புரம்:

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் முக்கண்ணன் தலைமையிலான அதிகாரிகள் நேற்று இரவு வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். விழுப்புரம் மாவட்டம் வானூர் அடுத்த திருச்சிற்றம்பலம் அருகே 50 பயணிகளை ஏற்றிக்கொண்டு பாண்டியிலிருந்து தமிழகப் பகுதிக்கு ஒரு பஸ் வந்தது. இதனை நிறுத்தி ஆவணங்களை சோதனை செய்த போது உரிய அனுமதியின்றி தனியார் பஸ் வந்தது தெரிந்தது. இதையடுத்து திண்டிவனம் வட்டார போக்குவரத்து அலுவலர் பஸ்சை நிறுத்தி அபராதம் விகித்தார். மேலும், அதில் வந்த பயணிகள் வேறு பஸ் மூலமாக அனுப்பி வைத்தனர்.

Tags:    

Similar News