உள்ளூர் செய்திகள் (District)

பெரம்பலூரில் நடந்த இரு வேறு விபத்தில் - இரு சக்கர வாகனத்தில் சென்ற 2 பேர் படுகாயம்

Published On 2023-11-21 05:53 GMT   |   Update On 2023-11-21 05:53 GMT
  • விடுமுறையை முடிந்த பின்னர் மீண்டும் சென்னைக்கு தனது இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார்.
  • இந்த விபத்தில் குமார் லேசான காயங்களுடன் உயிர்தப்பினார்.

குன்னம்

புதுக்கோட்டை மாவட்டம் பொன்ன மராவதி, உடையார்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சந்தோஷ்குமார்(வயது 35). சென்னையில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்த இவர் விடுமுறைக்காக பொன்னமராவதி வந்துள்ளார். விடுமுறையை முடிந்த பின்னர் மீண்டும் சென்னைக்கு தனது இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். பாடாலூர் காரைபிரிவு ரோடு அருகே சென்று கொண்டிருந்த போது, அப்பகுதியை சேர்ந்த குமார் என்பவர் சாலையை கடக்க முற்பட்டு உள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக சந்தோஷ்குமார் இருசக்கர வாகனம் குமார் மீது மோதி விபத்துக்குள்ளா னது. இந்த விபத்தில் குமார் லேசான காயங்களுடன் உயிர்தப்பினார். ஆனால் பலத்த காயமடைந்த சந்தோஷ்குமாரை பாடாலூர் போலீசார் மீட்டு, ஆம்புலன்ஸ் உதவியுடன் திருச்சி அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்த னர். இது குறித்து வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதே போல பெரம்பலூர் மாவட்டம் ஊட்டத்துரை சேர்ந்தவர் சுரேஷ்(வயது 22). விவசாய தொழில் செய்து வந்த இவர் தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். ஊட்டத்தூர் பிரிவு ரோடு பகுதியில் அவர் சென்று கொண்டிருந்த போது செய்யாறுவில் இருந்து வந்த அய்யப்பபக்தர்கள் கார் ஒன்று இவர் மீது மோதி உள்ளது. இதில் பலத்த காயம் அடைந்த அவர் மீட்கப்பட்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக் கப்பட்டு உள்ளார். பாடா லூர் போலீசார் இது குறித்து வழக்கு பதிந்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News