உள்ளூர் செய்திகள் (District)

அ.தி.மு.க. பிரமுகர் ஓட்டலை அடித்து நொறுக்கிய 3 பேர் கைது

Published On 2023-11-15 07:02 GMT   |   Update On 2023-11-15 07:02 GMT
  • பெரம்பலூரில் அ.தி.மு.க. பிரமுகர் ஓட்டலை அடித்து நொறுக்கிய 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்
  • மேலும் 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்

பெரம்பலூர்,

பெரம்பலூர் மாவட்டம் விளாமத்தூர் கிராமம் கிழக்கு தெருவை சேர்ந்தவர் மாமுண்டி துரை(வயது 39). அ.தி.மு.க. பிரமுகரான இவர், திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலை, பெரம்பலூர் மாவட்டம் கல்பாடி பிரிவு ரோடு அருகே ஓட்டல் நடத்தி வருகிறார்.

இந்நிலையில் இவரது ஓட்டலுக்கு அடையாளம் தெரியாத வகையில் முகத்தில் துணியை கட்டிக்கொண்டு வந்த சிலர் டேபிள், சேர், ஃப்ரிட்ஜ், டிவி உள்ளிட்ட பொருட்க ளை அடித்து நொறுக்கி சேதப்படுத்திவிட்டு தப்பிவிட்டனர்.

இது குறித்த புகாரின் பேரில் பெரம்பலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி னர். அப்போது அப்பகுதி யில் உள்ள சிசிடிவி கேமரா காட்சி பதிவுகளை ஆய்வு மேற்கொண்டனர். இந்த விசாரணையில், தாக்குதலில் ஈடுபட்டது அய்யலூரை சேர்ந்த கலையரசன் (24), வெண்பா வூரை சேர்ந்த அழகேந்திரன் (35), வரகுபாடியை சேர்ந்த விக்னேஷ்(24) என்பது தெரியவந்தது. இதனை தொடர்ந்து 3 பேரையும் கைது செய்த போலீசார் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் இவ்வழக்கில் தொடர்புடைய 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News