உள்ளூர் செய்திகள் (District)

அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

Published On 2023-10-09 06:50 GMT   |   Update On 2023-10-09 06:50 GMT
  • பெரம்பலூர் மாவட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது
  • மாவட்ட செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான தமிழ்ச்செல்வன் தலைமையில் நடந்தது

பெரம்பலூர்,

பெரம்பலூர் மாவட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. மாநில அமைப்பு செயலாளரும், முன்னாள் துணை சபாநாயகருமான வரகூர் அருணாச்சலம், முன்னாள் எம்.பி.க்கள் மருதராஜா, சந்திரகாசி, முன்னாள் எம்.எல்.ஏ. பூவைசெழியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.மாவட்ட செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான தமிழ்ச்செல்வன் தலைமை வகித்து பேசியதாவது:-வருகிற பாராளுமன்ற மற்றும் சட்டசபை தேர்தலில் பெரம்பலூர் மாவட்டத்தில் அதிகப்படியான ஓட்டுக்கள் வித்தியாசத்தில் அ.தி.மு.க. வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்து பெரம்பலூரை அ.தி.மு.க.வின் எக்கு கோட்டையாக மாற்றி காட்டுவோம். இந்த வெற்றியை பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான பழனிச்சாமியிடம் சமர்ப்பிப்பது தான் நமது முதல் இலக்கு.தேர்தல் நெருங்கி வரும் நிலையில் இப்போதே பூத் கமிட்டி அமைத்து தேர்தல் பணிகளை விரைந்து தொடங்க வேண்டும். இளம்பெண்கள் பாசறை அமைப்பில் அதிகளவில் பெண்களை உறுப்பினர்களை சேர்க்கவேண்டும் இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் மாவட்ட அவை தலைவர் குணசீலன், நகர செயலாளர் ராஜபூபதி, ஒன்றிய செயலாளர்கள் செல்வக்குமார், கர்ணன், சிவப்பிரகாசம், செல்வகுமார், மாவட்ட நிர்வாகிகள் ராஜாராம், வீரபாண்டியன், ஏ.கே. ராஜேந்திரன், ராணி மற்றும் ஏகேஎன் அசோகன், கல்பாடி கூட்டுறவு வங்கி தலைவர் முத்தமிழ்செல்வன், கல்பாடி ஊராட்சி துணை தலைவர் புஷ்பராஜ், துறைமங்கலம் சந்திரமோகன், குன்னம் ரெங்கநாதன், வக்கீல்கள் கணேசன், ராமசாமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News