உள்ளூர் செய்திகள் (District)

விழிப்புணர்வு பயண குழுவினருக்கு பெரம்பலூரில் வரவேற்பு

Published On 2023-10-09 06:47 GMT   |   Update On 2023-10-09 06:47 GMT
  • பெண் குழந்தைகள் காப்போம் திட்ட விழிப்புணர்வு பயண குழுவினருக்கு பெரம்பலூரில் வரவேற்பு அளிக்கப்பட்டது
  • கன்னியாகுமரி முதல் குஜராத் வரை இருசக்கர வாகனங்களில் விழிப்புணர்வு பயணம் நடைபெறுகிறது

பெரம்பலூர்,

பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் என்ற திட்டம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் கன்னியாகுமரி முதல் குஜராத் வரை இருசக்கர வாகனங்களில் விழிப்புணர்வு பயணம் மேற்கொண்டுள்ள இந்திய ரிசர்வ் படையின் வீராங்கனைகள் நேற்று பெரம்பலூர் வந்தனர்.பெரம்பலுார் ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லுாரியில் வளாகத்தில் நடந்த வரவேற்பு நிகழச்சிக்கு ஸ்ரீராமகிருஷ்ணா கல்வி நிறுவனங்களின் தலைவர் சிவசுப்பிரமணியன் முன்னிலை வகித்தார். டி.ஆர்.ஓ. வடிவேல்பிரபு கொடியசைத்து வைத்து வழியனுப்பி வைத்தார்.நிகழ்ச்சியில் ஏ.டி.எஸ்.பி. மதியழகன், கல்லூரி செயலாளர் விவேகானந்தன், இந்திய ரிசர்வ் படையின் .டி.எஸ்.பி. கார்த்திகேயன், ரோட்டரி சங்க பெரம்பலூர் மாவட்ட கவர்னர் கார்த்திகேயன், ஊர்க்காவல் படை மண்டல தளபதி அரவிந்தன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News