உள்ளூர் செய்திகள் (District)

மாவட்ட அளவிலான வாலிபால் போட்டி

Published On 2023-10-04 07:06 GMT   |   Update On 2023-10-04 07:06 GMT
  • பெரம்பலூரில் மாவட்ட அளவிலான வாலிபால் போட்டி நடைபெற்றது
  • வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது

பெரம்பலூர்,

பெரம்பலூர் மாவட்ட வாலிபால் அசோசியேஷன் சார்பில் எம்.ஜி.ஆர். விளை யாட்டு அரங்கில் 2 நாள்கள் நடந்த வாலிபால் போட்டி களில் வெற்றிபெற்ற அணி யினருக்கு பரிசளிப்பு விழா நடந்தது.

போட்டி தொடக்க விழா விற்கு வாலிபால் சங்க பெரம்பலூர் மாவட்ட தலைவர் பொறியாளர் பரமேஷ்குமார் தலைமை வகித்தார். சிறப்பு விருந்தி னராக எஸ்பி ஷ்யாம்ளா தேவி கலந்து கொண்டு போ ட்டியை தொடங்கிவைத்தார்.

மாவட்ட அளவில் ஆண் கள் மற்றும் பெண்களுக்கு தனித் தனியாக நடைபெற்ற இப்போட்டிகளில் 40 அணி களை சேர்ந்த 240 விளையா ட்டு வீரர்கள், வீராங்கணை கள் கலந்துகொண்டனர். இதில், பெண்களுக்கான போட்டியில் பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் கல்லூரி மாணவிகள் முதலிடமும், எஸ்.ஆடுதுறை அரசு மேல்நிலைப்பள்ளி மாணவிகள் 2-வது இடமும், ஒகளூர் அரசு மேல்நிலைப்பள்ளி மாண விகள் 3-வது இடமும் பெற்றனர்.ஆண்களுக்கான போட்டியில், எஸ்.ஆடுதுறை எவரெஸ்ட் அணியினர் முதலிடமும், தனலட்சுமி கல்விக் குழுமம் 2-வது இடமும், கொளக்காநத்தம் டி.ஜி.பி அணியினர் 3-வது இடமும் பெற்றனர்.இதனை தொடர்ந்து வெற்றிப்பெற்ற அணிக ளுக்கு பரிசளிப்பு விழா நடந்தது. வாலிபால் சங்க பெரம்பலூர் மாவட்ட தலைவர் பொறியாளர் பரமேஷ்குமார் தலைமை வகித்தார், எம்.எல்.ஏ. பிரபாகரன், மாவட்ட ஊராட்சி தலைவர் ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

போட்டிகளில் வெற்றி ப்பெற்ற அணிகளுக்கு அஸ்வின்ஸ் ஹோம் ஸ்வீட் அன்ட் ஸ்நாக்ஸ் நிறுவன தலைவர் கணேசன் பரிசு கோப்பை, ரொக்க பரிசு மற்றும் சான்றிதழ்களை வழங்கி பாராட்டினார்.

இதில் மாவட்ட விளை யாட்டு அலுவலர் லெனின், தி.மு.க. தலைமை செயற்குழு உறுப்பினர் ராஜேந்திரன், மாவட்ட கவுன்சிலர் பாஸ்கர், மாநில மருத்துவ அணி துணை செயலாளர் டாக்டர்கள் வல்லபன், செங்குட்டுவன், தி.மு.க. ஒன்றிய செயலாள ர்கள் ராஜ்குமார், மதியழகன், ராஜேந்திரன், துணை செயலாளர் சிவராஜ், இணை செயலாளர் செல்வம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.முன்னதாக வாலிபால் சங்க மாவட்ட செயலாளர் அதியமான் வரவேற்றார். முடிவில் மாவட்ட துணை தலைவர் ஹரிபாஸ்கர் நன்றி கூறினார்.

Tags:    

Similar News