உள்ளூர் செய்திகள்

வீட்டில் தீவிபத்து; பொருட்கள் எரிந்து நாசம்

Published On 2022-10-29 09:53 GMT   |   Update On 2022-10-29 09:53 GMT
  • வீட்டில் ஏற்பட்ட தீவிபத்தில் பொருட்கள் எரிந்து நாசமடைந்தன
  • எம்.எல்.ஏ. நேரில் ஆறுதல்

பெரம்பலூர்

பெரம்பலூர் நகரம் எளம்பலூர் சாலையில் உள்ள தென்றல் நகர் பகுதியில் குடியிருந்து வருபவர் கஸ்தூரி (வயது 46), இவரது கணவர் கொளஞ்சிநாதன் இறந்து விட்டார் இந்நிலையில், மகன் கமலேஸ் உடன் தனக்கு சொந்த மான ஓட்டு வீட்டில் வசித்து வந்தார். நேற்று மாலை கஸ்தூரி மற்றும் அவரது மகன் கமலேஸ் இருவரும் உறவினர் வீட்டுக்கு சென்று விட்டனர். அப்போது சற்று நேரத்தில் கஸ்தூரியின் வீட்டில் இருந்து அதிகமான புகை வெளியே வந்துள்ளது.

இதனை அருகில் இருந்தவர்கள் பார்த்து உடனடியாக தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்ததனர். அதன் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறை வீரர்கள் ஓட்டு வீட்டில் கொழுந்துவிட்டு எறிந்து கொண்டிருந்த, தீயை அனைத்தனர். இச்சம்பவத்தில் வீட்டில் உள்ள பீரோ, கட்டில், டேபிள் சேர், பாத்திரங்கள் மற்றும் உடமைகள் அனைத்தும் எரிந்து சாம்பாலாது.

தகவல் அறிந்த பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் பிரபாகரன் இரவு நேரம் என்றும் பாராமல் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று தீயில் சேதமான வீட்டினை பார்வையிட்டு அதன் உரிமையாளர் கஸ்தூரி மற்றும் அவரது மகன் கமலேஷ் ஆகியோருக்கு ஆறுதல் தெரிவித்து, அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்தார். மேலும் குடிசை மாற்று வாரியத்தின் மூலம் புதிய வீடு கட்டி தருவதற்கான நடவடிக்கைகள் மேற்கொ ள்ளப்படும் எனவும் தெரிவித்து ஆறுதல் கூறினார்.

Tags:    

Similar News