உள்ளூர் செய்திகள் (District)

பெரம்பலூர் மாவட்டத்தில் நாளை மறுநாள் கிராம சபை கூட்டம்

Published On 2023-10-30 06:14 GMT   |   Update On 2023-10-30 06:14 GMT
  • நாளை மறுநாள் (புதன் கிழமை) காலை 10 மணியளவில் கிராம சபைக் கூட்டம் அந்தந்த ஊராட்சி மன்ற தலைவர் தலைமையில் நடைபெறவுள்ளது.
  • இதர பொருட்கள் குறித்தும் விவாதித்திட அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என கலெக்டர் கற்பகம் தெரிவித்துள்ளார்.

பெரம்பலூர்

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள 121 ஊராட்சிகளிலும் உள்ளாட்சி தினமான நாளை மறுநாள் (புதன் கிழமை) காலை 10 மணியளவில் கிராம சபைக் கூட்டம் அந்தந்த ஊராட்சி மன்ற தலைவர் தலைமையில் நடைபெறவுள்ளது.

கூட்டத்தை கண்காணிக்க ஒவ்வொரு ஊராட்சிக்கும் பற்றாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். வட்டாரம் வாரியாக மாவட்ட நிலை அலுவலர்கள் மண்டல அலுவலர்களாக கிராம சபைக்கூட்டம் நடைபெறுவதை மேற்பார்வையிட நியமிக்கப்பட்டுள்ளனர்.

உள்ளாட்சி பிரதிநிதிகள், கிராம வார்டு உறுப்பினர்கள் மற்றும் கிராம சபா உறுப்பினர்களாகிய வாக்காளர்கள் அனைவரும் கலந்து கொண்டு கிராம ஊராட்சிகளின் வெளிப்படையான நிர்வாகத்திற்கும், ஆக்கப்பூர்வமான ஊராட்சி நிர்வாகம் மற்றும் ஊராட்சியில் இதர பொருட்கள் குறித்தும் விவாதித்திட அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என கலெக்டர் கற்பகம் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News