உள்ளூர் செய்திகள் (District)

ஜாக்டோ - ஜியோ சார்பில் மனித சங்கிலி போராட்டம்

Published On 2023-03-25 08:04 GMT   |   Update On 2023-03-25 08:04 GMT
  • கோரிக்கைகளை வலியுறுத்தி மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது
  • நுாற்றுக்கணக்கானோர் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்

பெரம்பலூர்,

பெரம்பலூரில் மாவட்ட ஜாக்டோ - ஜியோ சார்பில் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி மனித சங்கிலி போராட்டம் நடந்தது.பெரம்பலூர் வெங்கடேசபுரம் பாரத ஸ்டேட் வங்கி முன்பு நடந்த போராட்டத்திற்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சுந்தரபாண்டியன் தலைமை நடைபெற்றது.இதில் அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் குமரிஆனந்தம், செயலாளர் மரியதாஸ், ஆசிரியர் சங்க ஒருங்கிணைப்பாளர் செல்வராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பட்டதாரி, முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழக மாநில தலைவர் மகேந்திரன் கோரிக்கைகளை விளக்கி கூறி நிறைவேற்ற வலியுறுத்தி பேசினார். பின்னர் மனித சங்கிலி போராட்டத்தை தொடங்கி வைத்தார்.இதில் புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், தி.மு.க அரசின் தேர்தல் வாக்குறு திகளை நிறைவேற்ற வேண்டும் அரசுத்து றைகளில் காலியாக உள்ள 6 லட்சம் பணியி டங்களை உடனே நிரப்பிட வேண்டும், சத்துணவு ஊழியர்களுக்கு வரைய றுக்கப்பட்ட ஊதியம் வழங்கவேண்டும், ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு தரவேண்டிய 21 மாத ஊதிய நிலுவை தொகையை உடனே வழங்கவேண்டும், அகவிலைப்படி உயர்வை காலம் தாழ்த்தாமல் மத்திய அரசு அறிவித்த உடனேயே வழங்கிடவேண்டும்தனியார்மயத்தினை ஊக்குவிக்கும் இளைஞ ர்களின் வேலைவாய்ப்பை பறித்திடும் அரசாணைகளை ரத்து செய்யவேண்டும். உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி மனித சங்கிலி போராட்டம் நடந்தது. இதில் 125 பெண்கள் உட்பட 300க்கு மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.  

Tags:    

Similar News