கூலிப்படை ஏவி மனைவியை கொலை செய்த கணவன்
- பெரம்பலூர் இளம்பெண் கொலையில் கணவரே கூலிப்படையை ஏவி மனைவியை கொலை செய்தது அம்பலமாகி உள்ளது
- போலீஸ் விசாரணையில் பரபரப்பு தகவல்
குன்னம்,
பெரம்பலூர் அருகே கணவருடன் இருசக்கர வாகனத்தில் சென்ற இளம் பெண் கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் அதிர்ச்சியூட்டும் தகவல் வெளியாகியுள்ளது.கணவனே கூலிப்படை வைத்து மனைவியை கொலை செய்துள்ளார் என்று கூறப்படுவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பெரம்பலூர் அருகே உள்ள எளம்பலூர் கிராமத்தை சேர்ந்தவர்கள் ராஜ்குமார்(வயது34), பிரவீணா(24), தம்பதியினர். இவர்களுக்கு கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் ஆகி இரு குழந்தைகள் உள்ளனர்.இந்தநிலையில் பெரம்பலூர் அருகே விஜய கோபாலபுரத்தில் உள்ள தனியார் டயர் தொழிற்சா லையில் வேலை பார்த்து வரும் ராஜ்குமார், சம்ப வத்தன்று இரவு வழக்கம் போல் இரவு சிப்ட் வேலைக்கு செல்வதற்கு தயாரான நிலையில், மனைவி பிரவீணாவை ஊருக்கு ஒதுக்குப்புறமாக வயல் பகுதியில் உள்ள சித்தப்பா வீட்டில் தங்க வைப்பதற்காக இருசக்கர வாகனத்தில் அழைத்து சென்றதாக தெரிகிறது.
எளம்பலூர் கிராமத்தில் இருந்து- செங்குணம் பிரிவு சாலைக்கு செல்லும் தார் சாலையில் 100 மீட்டர் தூரம் இருசக்கர வாகனம் சென்ற போது, திடீரென 5 பேர் கொண்ட கும்பல் வழிமறித்து சோளக்கா ட்டிற்கு இழுத்துச் சென்று பிரவீனா வையும்-ராஜ்குமா ரையும்- சரமாரியாக அறிவாளால் வெட்டிவிட்டு தப்பி ஓடி விட்டதாகவும் கூறப்பட்டது.படுகாயம் அடைந்த பிரவீனா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். ராஜ் குமார் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்தக்கொலை யில் குற்றவாளிகளை உட னடியாக பிடிக்க வேண்டும் என டிஎஸ்பி. பழனிச்சாமி மேற்பார்வையில் 3 தனிப்படைகள் அமைக்கப்ப ட்டு,கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடை பெற்று வந்தது. இந்த நிலையில் கள்ளக்காதல் விவகாரத்திற்கு பிரவீணா தடையாக இருந்ததால் அவரை கணவன் ராஜ்குமா ரே கூலிப்படையை வைத்து கொலை செய்துள்ளதாக போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளதாக கூறப்ப டுகிறது.மேலும் கூலிப்ப டையை பிடிக்க போலிசஅர் தீவிரம் காட்டி வருவதாகவும் தெரிகிறது. கணவனே கூலிப்படையை ஏவி கொலை செய்ததாக கூறப்ப டுவதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.