உள்ளூர் செய்திகள் (District)

மாநில அளவில் நடைபெற்ற கோ-கோ போட்டியில் ஹேன்ஸ் ரோவர் பப்ளிக் பள்ளி மாணவர்கள் வெண்கலப் பதக்கம்

Published On 2023-10-07 09:17 GMT   |   Update On 2023-10-07 09:17 GMT
  • மாநில அளவில் நடைபெற்ற கோ-கோ போட்டி
  • ஹேன்ஸ் ரோவர் பப்ளிக் பள்ளி மாணவர்கள் வெண்கலப் பதக்கம்

Perambalur News

மாநில அளவில் 15 வயதுக்கு உட்பட்டோருக்கான கோ- கோ போட்டி கடந்த செப்டம்பர் மாதம் 26 மற்றும் 27 தேதிகளில் திருச்சியில் நடைபெற்றது.

ராக் சிட்டி சகோதையா நிறுவனம் நடத்திய கோ- கோ போட்டியில் 50-க்கும் மேற்பட்ட பள்ளிகள் கலந்து கொண்டன. இப்போட்டியானது திருச்சியில் உள்ள திருச்சி பப்ளிக் பள்ளியில் நடைபெற்றது.

இதில் ரோவர் பப்ளிக் பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டு வெண்கல பதக்கம் வென்றனர். வெற்றி பெற்ற மாணவர்களை ரோவர் கல்வி நிறுவனங்களின் மேலாண் தலைவர் கே.வரதராஜன், துணை மேலாண் தலைவர் ஜான் அசோக் வரதராஜன், புனித யோவான் சங்க அறக்கட்டளை அறங்காவலர் மகாலட்சுமி வரதராஜன் ஆகியோர் பாராட்டி தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

இந்நிகழ்வின்போது பள்ளி முதல்வர் ஜீன் ஜாக்லின், துணை முதல்வர் விஜயசாந்தி மற்றும் உடற்கல்வி ஆசிரியர்கள் ஆகியோர் உடன் இருந்தனர்.

Tags:    

Similar News