உள்ளூர் செய்திகள் (District)

வாலிகண்டபுரத்தில் லாட்டரி சீட்டு விற்றவர் கைது

Published On 2023-05-23 06:34 GMT   |   Update On 2023-05-23 06:34 GMT
  • வாலிகண்டபுரத்தில் லாட்டரி சீட்டு விற்றவர் கைது செய்யபட்டார்
  • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அகரம்சீகூர்,

பெரம்பலூர் மாவட்டம் அகரம்சீகூர் அடுத்துள்ள வாலிகண்டபுரம் பகுதியில் லாட்டரி சீட்டு விற்பனை செய்வதாக கிடைத்த ரகசிய தகவலின் பெயரில் மங்கலமேடு காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.அப்போது கடலூர் மாவட்டம் தொழுதூர் தெற்கு தெருவை சேர்ந்தவர் முத்தையா மகன் காசிநாதன் வயது (30) இவர் தனது இருசக்கர வாகனத்தில் லாட்டரி சீட்டு விற்பனைசெய்து கொண்டிருந்தார். இதனை தொடர்ந்து அவரை கையும் களவுமாக பிடித்த மங்களமேடு போலீசார், அவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News