உள்ளூர் செய்திகள் (District)

அடையாளம் தெரியாத வாகனம் மோதி ஒருவர் சாவு

Published On 2023-10-24 06:23 GMT   |   Update On 2023-10-24 06:23 GMT
  • பெரம்பலூரில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி ஒருவர் பலியானார்
  • மங்கலமேடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்

பெரம்பலூர்,

பெரம்பலூர் மாவட்டம் வி.களத்தூர் மில்லத் நகரை சேர்ந்தவர் அன்சர் அலி (வயது 38). இவர் சம்பவத்தன்று இரவு திருச்சி -சென்னை தேசிய நெடுஞ்சாலையில் அயன் பேரையூர் பஸ் நிறுத்தம் அருகே சாலையை கடக்க முயன்றார். அப்போது எதிரே வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். தகவலின் பேரில் வந்த மங்கலமேடு போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். பின்னர் இது குறித்த புகாரின் பேரில் மங்கலமேடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள் 

Tags:    

Similar News