உள்ளூர் செய்திகள் (District)

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

Published On 2023-10-10 06:27 GMT   |   Update On 2023-10-10 06:27 GMT
  • பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் கற்பகம் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது
  • கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 503 மனுக்கள் பெறப்பட்டது

பெரம்பலூர்,

பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் கற்பகம் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் வருவாய் துறையின் சார்பில் 3 பேருக்கு இலவச வீட்டுமனைப் பட்டாக்கள், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் பெற்றோரின் ஓய்வூதியத்தினை தொடர்ந்து பெறும் வகையில் பாதுகாவலர் நியமன சான்றிதழ், காதொலி கருவி ஆகியவற்றையும் கலெக்டர் கற்பகம் வழங்கினார். கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 503 மனுக்கள் பெறப்பட்டது. இதில், மாவட்ட வருவாய் அலுவலர் வடிவேல் பிரபு, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் லலிதா, உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) அருளாளன், சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை கலெக்டர் கார்த்திக்கேயன், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் பொம்மி மற்றும் அனைத்து துறைகளின் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News