உள்ளூர் செய்திகள் (District)

போலீசார் சிறப்பு விசாரணை முகாம்

Published On 2023-10-26 07:17 GMT   |   Update On 2023-10-26 07:17 GMT
  • பெரம்பலூரில் போலீசார் சிறப்பு விசாரணை முகாம் நடைபெற்றது
  • பொதுமக்களிடம் இருந்து 16 மனுக்கள் பெறப்பட்டன

பெரம்பலூர்,

பெரம்பலூர் மாவட்ட போலீஸ் அலுவலகத்தில் போலீசாரின் சிறப்பு மனு விசாரணை முகாம்கள் நேற்று நடந்தது. முகாமுக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஷ்யாம்ளா தேவி தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார். முகாமில் மொத்தம் 16 மனுக்கள் பெறப்பட்டு சம்பந்தப்பட்ட போலீஸ் நிலையங்களுக்கு நடவடிக்கை மேற்கொள்ள அனுப்பி வைக்கப்பட்டது.

Tags:    

Similar News