உள்ளூர் செய்திகள்

பேரளி பகுதியில் நாளை மின்தடை

Published On 2023-05-18 05:26 GMT   |   Update On 2023-05-18 05:26 GMT
  • பேரளி பகுதியில் நாளை மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.
  • காலை 9.45 மணிமுதல் பராமரிப்பு பணிகள் நிறைவடையும் வரை மின்வினியோகம் இருக்காது

பெரம்பலூர்:

பெரம்பலூரை அடுத்த பேரளியில் உள்ள துணை மின்நிலையத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. எனவே பேரளி துணை மின்நிலையத்தில் இருந்து மின்வினியோகம் பெறும் பேரளி, அசூர், சித்தளி, பீல்வாடி, ஒதியம், சிறுகுடல், அருமடல், செங்குணம், கீழப்புலியூர், கே.புதூர், எஸ்.குடிக்காடு, வாலிகண்டபுரம், கல்பாடி, கே.எறையூர், நெடுவாசல், கவுல்பாளையம், மருவத்தூர், குரும்பாபாளையம், ஆகிய பகுதிகளில் காலை 9.45 மணிமுதல் பராமரிப்பு பணிகள் நிறைவடையும் வரை மின்வினியோகம் இருக்காது என தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழக அலுவலகத்தின் உதவி செயற்பொறியாளர் முத்தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News