ராகு கேது பெயர்ச்சி சிறப்பு அபிஷேகம்
பெரம்பலூர்,
பெரம்பலூர் பிரம்மபுரீஸ்வரர் கோவிலில் ராகு கேது பெயர்ச்சியை முன்னிட்டு நேற்று மாலை 2.30 மணியளவில் நவகிரக மண்டபத்தில் எழுந்தருளி இருக்கும் ராகு கேது மற்றும் அனைத்து கிரக மூர்த்திகளுக்கும் பல்வேறு வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.பின்னர் அலங்காரம் செய்யப்பட்டு மகாதீபாரதணை காண்பிக்கப்பட்டது. அதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். மேலும் பரிகார ராசிக்காரர்கள் பரிகார பூஜைகளை செய்தனர். பின்னர் பிரசாதம் வழங்கப்பட்டது. பூஜைகளை கவுரிசங்கர் சிவாச்சாரியார் செய்து வைத்தார்.இதில் வர்த்த சங்க தலைவர் சாமிஇளங்கோவன், முன்னாள் அறங்காவலர் வைத்தீஸ்வரன், முன்னாள் நகராட்சி கவுன்சிலர் ரமேஷ்பாண்டியன், சுரேஷ் உட்பட பலர் கலந்துகொண்டனர். ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் கோவிந்தராஜன், தர்மபரிபாலன சங்கத்தினர் செய்திருந்தனர்.