உள்ளூர் செய்திகள் (District)
வெற்றிப் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டு...
பெரம்பலூர்:
பெரம்பலூர் கிறிஸ்டியன் மெட்ரிக் மேல்நலைப் பள்ளியில் 21-ஆம் ஆண்டு விழா நடந்தது. நடந்த விழாவிற்கு கிறிஸ்டியன் கல்வி நிறுவனங்களின் நிறுவனர் கிறிஸ்டோபர் தலைமை வகித்தார். கல்விநிறுவன செயலாளர் மித்ரா முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினர்களாக மாவட்ட கல்வி அலுவலர் சண்முக சுந்தரம், முன்னாள் எஸ்பி கலியமூர்த்தி ஆகியோர் கலந்துகொண்டு பல்வேறு போட்டிகளில் வெற்றிப் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கி பாராட்டி பேசினர். மேலும் சிறப்பாக பணியாற்றிய ஆசிரியர்களுக்கும், அலுவலக பணியாளர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது.விழாவில் கலை நிகழ்ச்சிகள் நடந்தது. இதில் ஊராட்சி தலைவர் கலைசெல்வன், டாக்டர் கோசிபா மற்றும் ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.