உள்ளூர் செய்திகள் (District)

கிராம உதவியாளர்கள் மாநில கூட்டம்

Published On 2023-10-29 06:52 GMT   |   Update On 2023-10-29 06:52 GMT
  • பெரம்பலூர் அருகே கிராம உதவியாளர்கள் மாநில கூட்டம்
  • 500-க்கும் மேற்பட்ட கிராம உதவியாளர்கள் கலந்து கொண்டனர்.

அகரம்சீகூர், 

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டம் அகரம்சீகூர் அருகேயுள்ள சின்னாறு தனியார் திருமண மண்டபத்தில் தமிழ்நாடு அரசு கிராம உதவியாளர்கள் மாநில கூட்டம் மாநில தலைவர் மனோகரன் தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் பெரம்பலூர் மாவட்ட செயலாளர் பிரேம்குமார் வரவேற்புரையாற்றினார். தமிழக அரசு அறிவித்த ஏழாவது ஊதிய குழுவின் பரிந்துரைப்படி தமிழ்நாட்டில் அனைத்து கிராம உதவியாளர்களுக்கும் 42 சதவீதத்தில் இருந்து 46 சதவீதமாக அகவிலைப்படி உயர்த்திய தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்தும்,

வருவாய் துறை அமைச்சர் மற்றும் வருவாய் துறை ஆணையாளர்களை சந்தித்து வலியுறுத்தப்பட்ட 7 அம்ச கோரிக்கைகளில் 3 அம்ச கோரிக்கைகள் 10 நாட்களுக்குள்ளும், ஏனைய கோரிக்கைகள் படிப்படியாக நிறைவேற்றுவதாக உறுதி அளிக்கப்பட்டது. அதனை நிறைவேற்ற வேண்டும். கிராம உதவியாளர்கள் இறந்தால் கருணை அடிப்படையில் குடும்பத்தினருக்கு பணி நியமன ஆணை வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இக்கூட்டத்தில் 500-க்கும் மேற்பட்ட கிராம உதவியாளர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News