உள்ளூர் செய்திகள் (District)

சிறப்பு மனு விசாரணை முகாம்

Published On 2023-10-12 08:33 GMT   |   Update On 2023-10-12 08:33 GMT
  • பெரம்பலூரில் போலீசாரின் சிறப்பு மனு விசாரணை முகாம் நடைபெற்றது
  • 28 கோரிக்கை மனுக்களை சம்பந்தப்பட்ட போலீஸ் நிலையங்களுக்கு நடவடிக்கை மேற்கொள்ள அனுப்பி வைத்தனர்

பெரம்பலூர்,

பெரம்பலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஷ்யாம்ளா தேவி உத்தரவின்பேரில் மாவட்ட போலீஸ் அலுவலகத்தில் போலீசாரின் சிறப்பு மனு விசாரணை முகாம் நேற்று நடந்தது. முகாமிற்கு மாவட்ட குற்றப்பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு தங்கவேல் தலைமையில் போலீசார் பொதுமக்களிடம் இருந்து பெற்ற மொத்தம் 28 கோரிக்கை மனுக்களை சம்பந்தப்பட்ட போலீஸ் நிலையங்களுக்கு நடவடிக்கை மேற்கொள்ள அனுப்பி வைத்தனர். ஒவ்வொரு வாரமும் புதன்கிழமை தோறும் நடைபெறும் இந்த சிறப்பு மனு விசாரணை முகாமில் கலந்து கொள்ள வருபவர்கள் மாவட்ட போலீஸ் அலுவலகம் வருவதற்கு ஏதுவாக போலீசார் சார்பில் பாலக்கரையில் இருந்து போலீஸ் அலுவலகத்திற்கும், மீண்டும் போலீஸ் அலுவலகத்திலிருந்து புதிய பஸ் நிலையம் செல்ல பஸ் வசதி செய்யப்பட்டுள்ளது, என்று துணை போலீஸ் சூப்பிரண்டு தங்கவேல் தெரிவித்தார்.

Tags:    

Similar News